ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சைபர் குற்றங்களிலும் 'பொன்னான நேரம்' முக்கியம்: மக்களே எச்சரிக்கை

சைபர் பிரிவு காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததால், பணம் மீண்டும் பறிகொடுத்தவரின் கணக்குக்கே வந்து சேர்ந்தது.

News image
சைபர் மோசடி கும்பலை பிடித்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி
Updated On :3 மார்ச் 2023, 12:29 pm

DIN

மும்பை: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் கிரெடிட் கார்டிலிருந்து திருடப்பட்ட ரூ.7.15 லட்சத்தை, சைபர் பிரிவு காவலர்கள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததால், பணம் மீண்டும் பறிகொடுத்தவரின் கணக்குக்கே வந்து சேர்ந்தது.

மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் கிரெடிட் கார்டிலிருந்து ஒரு தனியார் வங்கியின் வங்கிக் கணக்குக்கு ரூ.7.15 லட்சம் மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது.

இது குறித்து உடனடியாக சைபர் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அண்மையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த போது கையும் களவுமாகப்பிடிப்பட்டு, உடனடியாக அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

தனியார் வங்கியும், மோசடி குறித்து காவல்துறையினர் அளித்த முறைகேடுப் புகாரை பரிசீலித்து ரூ.7.06 லட்சத்தை பணத்தை இழந்த நபரின் வங்கிக் கணக்குக்கே வரவு வைத்துள்ளது.

இது குறித்து பணத்தை ஏமாந்த நபர் கூறுகையில், பிப்ரவரி 25ஆம் தேதி இரவு பணப்பரிமாற்றத்தின் மீது எனக்கு வங்கியிடமிருந்து அலர்ட் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்பில் கூறப்படும் தகவல் எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை. அதனால் எனது கிரெடிட் கார்டிலிருந்து மிகப்பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. உடனடியாக புகார் அளித்த நிலையில், காவலர்கள் பொன்னான நேரத்துக்குள் செயல்பட்டு, பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

இரவு 9 மணிக்கு பணம் பறிபோன நிலையில், 9.30 மணிக்கெல்லாம் சைபர் காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. உடனடியாக அவர்கள் தனியார் வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு, முறைகேடாகப் பணம் வரவு வைக்கப்பட்ட அந்த வங்கிக்கணக்கை முடக்க வைத்து, பணத்தைத் திரும்பத் தர நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.