மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மக்களவையில் அளித்த நிலையில், அதை ஏற்க அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார்.
இதனால் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.