மல்யுத்த வீரர்களுடன் பி.டி. உஷா நேரில் பேச்சு!

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவா் பி.டி.உஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.
மல்யுத்த வீரர்களுடன் பி.டி. உஷா நேரில் பேச்சு!
Updated on
1 min read

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவா் பி.டி.உஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 11 நாள்களாக இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தில்லி ஜந்தர் மந்தருக்கு வருகை தந்த பி.டி.உஷா, மல்யுத்த வீரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, ‘தெருக்களில் அமா்ந்து மல்யுத்த நட்சத்திர வீரா்கள் நடத்தி வரும் போராட்டம் ஒழுங்கீனமானது. அது இந்தியாவின் புகழைச் சீரழிக்கிறது’ என்று கூறிய பிடி உஷாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com