
ஜம்மு- காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது,
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பாதுகாப்பு கருதி ரஜோரி மாவட்டத்தில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.