மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!
Published on
Updated on
1 min read

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சிசோடியா கைது செய்யப்பட்டார். 

பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் விசாரணை நடைபெற்றது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது சிபிஐ காவலை ஜூன் 2 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிசோடியாவின் அமலாக்கத்துறை காவலும் மே 23 நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com