நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மே 2023, 12:15 pm

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4,900 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 57% இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், 21% நடந்து சென்றவர்களும் உயிரிழந்ததாக காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 15,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.