மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பிரசண்டா

நேபாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

News image
Updated On :31 மே 2023, 12:22 pm

DIN

நேபாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமையன்று பிரசண்டா சந்தித்துப் பேசி, இரு தரப்பிலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - நேபாளம் இடையேயான இருதரப்பு உறவில் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் ‘பிரசண்டா’வின் இந்தப்  பயணம் புதிய வரலாற்றைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக நேபாள பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு பிறகு பிரசண்டா மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக இது அமைந்துள்ளது. புது தில்லி விமான நிலையம் வந்த நேபாள பிரதமருக்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்பு அளித்தார்.

முன்னதாக தனது இந்திய பயணம் குறித்து, அந்நாட்டின் ‘காந்திபூா் டெய்லி’ பத்திரிகைக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கான எனது பயணத்தை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நேபாள அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ளன. இந்தியா சாா்பிலும் முன்னேற்பாடுகள் தீவிர கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். எனது பயணம் இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு உறவில் புதிய வரலாற்றைப் படைக்கும்.

பயணத்தின்போது நடைபெறுகிற சந்திப்புகளுக்குப் பிறகு நேபாளம் புதிய சாதனைகளைப் படைக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டும் என நம்புகிறேன். இருதரப்பு உறவுகளை வலுபடுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பில் புதிய வழிகளைக் கண்டறியவும் இப்பயணம் வாய்ப்பாக அமையும்.

சட்டபூா்வமாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ முதல் வெளிநாடு பயணமாக இந்தியாவுக்கு செல்ல எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், அந்நாட்டுடனான சிறப்பான உறவு காரணமாக இந்தியாவைத் தோ்வு செய்துள்ளேன் என்றார்.

இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் அவர் சந்தித்துப் பேசி திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.