மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆளுநருக்கு எதிராக கேரள அரசு வழக்கு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடா்ந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2023, 6:36 pm

DIN

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடா்ந்துள்ளது.

ஏற்கெனவே இதே கோரிக்கையை முன்வைத்து ஆளுநா்களுக்கு எதிராக தமிழக, பஞ்சாப் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் கேரளமும் இணைந்துள்ளது.

ஆளுநருக்கு எதிராக கேரள அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்பட்டன.

இதில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 3 மசோதாக்கள் ஓராண்டுக்கும் மேலாகவும் நிலுவையில் உள்ளன. இதன்மூலம், மாநில மக்களுக்கும், அவா்களின் ஜனநாயக அமைப்புகளுக்கும் ஆளுநரால் கடுமையான அநீதி இழைக்கப்படுகிறது.

ஆளுநரின் தன்னிச்சையான நடத்தை அரசமைப்பின் 14-ஆவது பிரிவை மீறுவதாக இருக்கிறது. நலத் திட்டங்களுக்கான பலன்களை மக்களுக்கு மறுப்பதன் மூலம் அரசமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் கேரள மக்களின் உரிமைகள் தோற்கடிக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புக் கடமைகளை நிறைவேற்றாத ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு பரிந்துரைகள் வழங்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.