தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு
Published on
Updated on
1 min read

தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே எல்லைப்பகுதி அருகே வியாழக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. 

தஜிகிஸ்தான் அருகே சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 9.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com