புது தில்லி: திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக மருத்துவ ஆய்வு இதழான பிஎம்ஜே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சீனாவில் மட்டும் 24.4 லட்சம் மக்கள் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலைகள், மின் ஆற்றல் உற்பத்தி மையங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் புதைபொருள் எரிபொருள்களால் (பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை) மட்டும் 50 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2019-ல் பெறப்பட்ட தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும் புதுப்பிக்க இயலாத எரிபொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் காற்று மாசு என்பது 61 சதவீதம் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையாக உருவாகும் காட்டுத் தீ, பாலைவன துகள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து மனிதர்களால் கண்டறியப்பட்ட எரிபொருள்கள் பயன்பாட்டைக் கட்டுபடுத்தினாலே 82 சதவீத உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
திறந்தவெளிக் காற்று மாசால் இருதய நோய்கள், மாரடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் சர்க்கை நோய்- பெரும்பாலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
‘பாரிஸ் சூழலியல் இலக்கு 2050’ நோக்கிய பயணத்தில் நிச்சயமற்ற நிலை நீடிப்பினும், எரிபொருள் தேவைக்குத் தூய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையங்களைப் பயன்படுத்தப்படும்போது சுழலியல் பாதுகாப்போடு மனிதர்ளின் உடல்நலத்திலும் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையின் இறுதிச் சடங்குக்குக்கூட வராத 4 பிள்ளைகள்! இறப்புச் சான்றிதழ் கேட்டு சண்டை!

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படங்கள்!

மாரடைப்பு நோயாளிகளின் ரத்தத்தில் அதிக பிளாஸ்டிக் துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


