மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காற்று மாசால் 20 லட்சம் பேர் உயிரிழப்பு!

காற்று மாசுபாட்டால் 21 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :30 நவம்பர் 2023, 7:38 am

DIN

புது தில்லி: திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக மருத்துவ ஆய்வு இதழான பிஎம்ஜே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சீனாவில் மட்டும் 24.4 லட்சம் மக்கள் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர்.

தொழிற்சாலைகள், மின் ஆற்றல் உற்பத்தி மையங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் புதைபொருள் எரிபொருள்களால் (பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை) மட்டும் 50 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

2019-ல் பெறப்பட்ட தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும் புதுப்பிக்க இயலாத எரிபொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் காற்று மாசு என்பது 61 சதவீதம் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக உருவாகும் காட்டுத் தீ, பாலைவன துகள்கள் ஆகியவற்றைத் தவிர்த்து மனிதர்களால் கண்டறியப்பட்ட எரிபொருள்கள் பயன்பாட்டைக் கட்டுபடுத்தினாலே 82 சதவீத உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

திறந்தவெளிக் காற்று மாசால் இருதய நோய்கள், மாரடைப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் சர்க்கை நோய்- பெரும்பாலும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 ‘பாரிஸ் சூழலியல் இலக்கு 2050’ நோக்கிய பயணத்தில் நிச்சயமற்ற நிலை நீடிப்பினும், எரிபொருள் தேவைக்குத் தூய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையங்களைப் பயன்படுத்தப்படும்போது சுழலியல் பாதுகாப்போடு மனிதர்ளின் உடல்நலத்திலும் பெரியளவில் மாற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.