நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வந்தது பாஜக அரசு எனவும், நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசத்தைக் கொண்டு வருவோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அப்போது அவர் பேசியதாவது: பாஜக தலைமையிலான அரசு மத்தியப் பிரதேசத்தை நாட்டின் 10 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதல் 3 சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். மத்தியப் பிரதேசத்தின் நலனுக்காக கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் எந்த ஒரு வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை. 60 ஆண்டுகள் என்பது குறைவான ஆண்டுகள் கிடையாது. 9 ஆண்டுகளில் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் 60 ஆண்டுகளில் கண்டிப்பாக வளர்ச்சி என்பது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மாநிலத்துக்கு வளர்ச்சியை கொடுக்கவில்லை. ஏழை மக்களின் உணர்வுகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது. சாதியின் பெயரில் மக்களை காங்கிரஸ் பிளவுப்படுத்துகிறது என்றார்.