தில்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், வருகின்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக செயற்குழுவை காங்கிரஸ் கூட்டியுள்ளது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை
கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

வல்லவர்கள் நல்லவர்கள் ஆத்திகவாதியும், நாத்திகவாதியும்

ஆட்டிசம் - ஓர் எளிய அறிமுகம்

சரிவுக்குப் பிறகு உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி! ஆட்டோ, வங்கி, உலோகம் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

