மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிக்கிம் சுற்றுலா கனவு கொடுங்கனவானதே..

சிக்கிம் மாநிலத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இப்படி கொடுங்கனவாகிவிட்டதே என, சிக்கிம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

News image
Updated On :6 அக்டோபர் 2023, 12:45 pm

DIN


சிக்கிம் மாநிலத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவு இப்படி கொடுங்கனவாகிவிட்டதே என, சிக்கிம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் காணாமல்போன 22 ராணுவ வீரா்கள் உள்பட 102 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இது மேக வெடிப்பு எனப்படும் மிகக் கனமழை காரணமாக பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததன் விளைவாக நிலைமை மிகவும் மோசமானது. அதாவது, ஒரு பனிப்பாறை ஏரி நிரம்பி வழிவது என்பது, பொதுவாக அதிகப்படியான மழையால் ஏற்படும் வெள்ளத்தை விட அதிக சேதத்தையும் அழிவையும் விளைவிக்கிறது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிக்கிமிலும் அதே பயங்கர நிகழ்வு நேரிட்டுள்ளது.

குஜராத்திலிருந்து குடும்பத்துடன் சிக்கிமுக்கு சுற்றுலா சென்ற சைலேந்திர குமார் என்ற சுற்றுலா பயணி, கூறுகையில், எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. புதன்கிழமை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு எங்கள் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது.

சிக்கிமின் பல மாவட்டங்களுக்கும் சென்றோம். அங்கு கண்கொள்ளாக் காட்சிகள் கிடைத்தன. வானிலையும் சிறப்பாகவே இருந்தது.  பெல்லிங் வந்த போது, புதன்கிழமை காலையில்தான் பிரச்னை ஆரம்பித்தது. பெல்லிங்கிலிருந்து திரும்பும்போது நிலச்சரிவால் நடுவழியில் சிக்கிக்கொண்டோம் என்று டார்ஜிலிங் பகுதியிலிருந்து பிடிஐக்கு தொலைபேசி வாயிலாக தகவலை அளித்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளம், நிலச்சரிவின்போது நடுவழியில் சிக்கிக்கொண்டு தவித்தோம். ஆனால், எனக்குத் தெரிந்த சிலர் மூலம் டார்ஜிலிங் வந்தடைந்தோம். எங்கு நாங்கள் சிக்கியிருந்தோம் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்.

சிக்கிமில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 138 மாணவ, மாணவிகளும் அடங்கும். இவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து, ரயில் மூலம் கொல்கத்தாவை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.