மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10 ஆண்டுகள்.. 3,100 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கடந்த 10 ஆண்டுகளில் 3,100 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 11:30 am

DIN

கடந்த 10 ஆண்டுகளில் 3,100 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மியை சேர்ந்த தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

அதேபோல், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சத்தா,

“பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் அமைதியாகவும், பிற மாநிலங்களில் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகின்றன. 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை 112 இடங்களில் மட்டுமே சோதனை செய்துள்ளது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 3,100 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிவு செய்த வழக்குகளில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மீது 95 சதவிகிதம் வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

ஆம் ஆத்மியின் மீது தனிப்பட்ட அன்பு இருப்பதால்தான் எங்களின் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இதெல்லாம் இந்தியா கூட்டணியின் மீதுள்ள பயத்தால் செய்து வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.