அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.776 கோடி வருவாய்

உலோகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசு 3 ஆண்டுகளில் ரூ.776 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 12:45 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் தேங்கியிருந்த உலோகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசு 3 ஆண்டுகளில் ரூ.776 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சிறப்புத் தூய்மைப் பிரச்சாரங்களில் உலோகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசு ரூ.776 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த வருவாயில் பெரும் பகுதி அதாவது, ரூ.176 கோடி, தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை பிரசாரத்தின் கடந்த 20 நாள்களில் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பிரசாரத்தின் மூன்றாம் வாரத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் இங்கு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், கடந்த மூன்று வாரங்களில் கழிவுகளை அகற்றிதன் மூலம், கிட்டத்தட்ட 86 லட்சம் சதுர அடி அலுவலக இடம் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம், "கழிவிலிருந்து செல்வம்" என்ற கருத்து பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.