2024-ல் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3,000-ஆக உயரும்! அபிஷேக் பானர்ஜி

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.  
2024-ல் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3,000-ஆக உயரும்! அபிஷேக் பானர்ஜி
Published on
Updated on
1 min read

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
மேற்கு வங்க மாநிலம், செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தூப்குரி இடைத்தேர்தலையொட்டி இன்று நடந்த பேரணியில் அவர் பேசியதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்படும். ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 
இது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். டிசம்பர் 31க்குள், தூப்குரியை துணைப் பிரிவாக மாற்றுவோம். இது தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன் என்றார். மத்திய அரசு சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்தது. 
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com