நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சனாதன விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

சனாதன விவகாரத்தில் உதயநிதி, பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2023, 7:11 am

DIN

சனாதன விவகாரத்தில் உதயநிதி, பிரியங்க் கார்கே மீது நடவடிக்கை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத உணா்வுகளை புண்படுத்தியதாக, தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் மகனும் கா்நாடக அமைச்சருமான பிரியங்க் காா்கே ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலதுசாரி வழக்குரைஞர்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்

ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எவ்வித வழக்காக இருந்தாலும் முறையீட்டுக்கான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், உரிய வழிமுறைப்படி வழக்கு குறித்து திங்கள்கிழமை முறையிடவும், மனுதாரருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.