நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தில்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 1:01 pm IST

தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் உள்ள பப்ளிக் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு தடுப்புப் பணியாளர்கள் காலை 8 மணியளவில் வளாகத்தில் சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளியில் இன்று தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரின் சோதனைக்குப் பிறகு தேர் சுமூகமாக நடந்தாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலி மின்னஞ்சல் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.