நாக்பூர்: ரூ.3.36 கோடி மதிப்புள்ள தரமற்ற பாக்கு பறிமுதல்!

நாக்பூரில் ரூ.3.36 கோடி மதிப்புள்ள 84,537 கிலோ பாக்குகளை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு பறிமுதல் செய்துள்ளது.
நாக்பூர்: ரூ.3.36 கோடி மதிப்புள்ள தரமற்ற பாக்கு பறிமுதல்!

நாக்பூர்: நாக்பூரில் ரூ.3.36 கோடி மதிப்புள்ள 84,537 கிலோ பாக்குகளை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு பறிமுதல் செய்துள்ளது.

கலம்னா மற்றும் லிஹிகான் ஆகிய இடங்களில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சோதனைகளில் ரூ.56.19 லட்சம் மதிப்புள்ள 11,727 கிலோ பாக்கும் அதே போல் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 72,810 கிலோ பாக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த பாக்கு தரம் குறைந்ததாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com