மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேருங்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிக்கு திரிணமூல் அறிவுரை!!

வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

News image
குணால் கோஷ்
Updated On :23 செப்டம்பர் 2023, 6:46 am

DIN

கொல்கத்தா: வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர்ந்துவிடுங்கள் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்க்கு திரிணமூல் செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், ஒரு நீதிபதி அரசியலில் ஈடுபட முடியுமா என்று கேள்வி எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், தனது நீதிபதி என்ற பதவியை அரணாக வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினருக்கு உதவும் வகையில், நீதித்துறைக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பல கோடி மதிப்புள்ள நான்கு மாடிக் குடியிருப்பை வைத்திருக்கும் சகோதரர்கள் என்று, கரோனா நிவாரண நிதி குறித்த வழக்கு ஒன்றில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், தனது கருத்தைப் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் குணால் கோஷ் இந்த விமரிசனத்தை முன்வைத்துள்ளார்.

தீப்தி சர்கார் என்ற பெண் அளித்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. தனது துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய கணவர், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி கரோனா பாதித்து மரணமடைந்தார். அவரது இறப்பால், இரண்டு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுவதாகவும், தனக்கு அரசு வேலையும், இழப்பீடும் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது. அப்படியானால் கரோனா பாதித்து பலியானவர்களுக்கு எவ்வளவு வழங்குவார்கள்? இதுவரை அப்படி யாருக்காவது இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இங்கே ஒரு மருமகன் இருக்கிறார், அவர்களுக்கு நான்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. அது பல கோடி மதிப்புடையது. அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கருத்தை நீதிபதி எழுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் திரிணமூல் காங்கிரஸ் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறது. செய்தித் தொடர்பாளர் கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில், நீதிபதி இருக்கையில் இருந்தால், என்னவேண்டுமானாலும் பேசலாமா? நீதிபதி இருக்கையில் இருந்துகொண்டு அரசியல் செல்வதாக இருந்தால், எதிர்க்கட்சிகளை காக்க முடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

மேலும், கங்கோபாத்யாய், முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவின் மகன் சந்தன் பாசு பற்றி அதிகம் அறிந்திருப்பார். மருமகன் என்று இந்த விசாரணையின்போது நீதிபதி இவரைத்தான் குறிப்பிட்டாரா? இல்லை, வேறு யாரையேனும் குறிப்பிட்டிருந்தால், அவர் நீதிபதி பதிவியிலிருந்து விலகி, அரசியலில் சேர்ந்துவிடலாம் என்று பதிவிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.