மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோடி பற்றிய கட்டுரையைப் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா? கொலீஜியத்தின் ஓபன் டாக்

பிரதமர் மோடி பற்றிய கட்டுரையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா? என்று மத்திய அரசுக்கு கொலிஜியம் நேரடியாக கேள்வியை எழுப்பியிருக்கிறது.

News image
மோடி பற்றிய கட்டுரையைப் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா
Updated On :20 ஜனவரி 2023, 10:36 am

DIN


பிரதமர் மோடி பற்றிய கட்டுரையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா? என்று மத்திய அரசுக்கு கொலீஜியம் நேரடியாக கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கொலீஜியம் பரிந்துரைத்த 3 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்த நிலையில், மத்திய அரசுக்கும் - நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்துக்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில், நீதிபதிகள் சஞ்சய் கிஷ கௌல், கே.எம். ஜோசப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

பொதுவாக, கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்காததற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த காரணங்கள் எதுவும் பொதுவெளியில் தெரியவராது.

ஆனால், முதல் முறையாக, நீதிபதிகளுக்கான பரிந்துரைகளை நிராகரித்து, மத்திய அரசு தெரிவிக்கும் காரணங்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட போட்டு உடைத்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்குரைஞர் சோரப் கிர்பாலை நியமிக்க கொலீஜியம் அளித்த பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு, அவர் தன்பாலின உறவில் இருப்பவர் என்று தெரிவித்திருந்ததை கொலீஜியம் பொதுவெளியில் தெரிவிக்க அது பேசுபொருளாகி இன்னமும் பேசிக் கொண்டிருக்கும் நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், மூத்த வழக்குரைஞா் ஆா்.ஜான் சத்யனை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் தனியாக மறுபரிந்துரை செய்துள்ளது.

அவரது பெயரை கொலீஜியம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பரிந்துரைத்திருந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், அவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. பிரதமா் மோடி தொடா்பாக ஏற்கெனவே வெளியான செய்தியை மட்டுமே அவா் பகிா்ந்ததாகத் தெரிவித்துள்ள கொலீஜியம், இது நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான விதிகளை மீறிய செயல் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.