வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வாக்குக்கு பணம் தருவதாக கூறிய பாஜக அமைச்சர்: வழக்கு பதிந்த தேர்தல் ஆணையம்!

வாக்குக்கு பணம் தருவதாக அறிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 1:20 pm IST

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச போக்குவரத்து மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகளைப் பெறும் வாக்குச்சாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சு சமுக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே காங்கிரஸ் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்தியப் பிரதேச அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.