பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து: கங்கனா

‘எனது நற்பெயரை கெடுக்கும் இதுபோன்ற வதந்திகள் மக்கள் மத்தியில் எடுபடாது’

கங்கனா ரணாவத் - ANI

Published On :

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க ஹிந்து என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.

ஹிமாசல பிரதேசம் மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார் பேசுகையில், மாட்டிறைச்சி பிடிக்கும் என்று கங்கனா ஒருமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா,

“நான் மாட்டிறைச்சி அல்லது எவ்விதமான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதராமற்ற குற்றச்சாட்டை பரப்புவது வெட்கக்கேடானது. பல ஆண்டுகளாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து வாழ்ந்து வருகிறேன்.

எனது நற்பெயரை கெடுக்கும் இதுபோன்ற வதந்திகள் எடுபடாது. மக்களுக்கு தெரியும் நான் பெருமைமிக்க ஹிந்து என்று. அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. ஜெய் ஸ்ரீராம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.