டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சமாஜவாதி வேட்பாளரும் அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் தனக்கு ரூ. 15.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவ், கட்சியின் மூத்த தலைவர்களான சிவபால் சிங் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.

டிம்பிள் தனது வேட்பு மனுவில் தனக்குச் சொந்தமாக ரூ. 10.44 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் ரூ. 5.10 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவோ கடந்த 2022இல் மெயின்புரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவர் அறிவித்த சொத்து மதிப்பு ரூ. 14 கோடியாக இருந்தது.

டிம்பிள் தனது வேட்பு மனுவில் தெரிவித்த தகலின்படி, அகிலேஷ் யாதவுக்கு சொந்தமாக ரூ. 9.12 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் ரூ. 17.22 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இருவரின் ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 27.66 கோடியாகும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com