மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன் என்று எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 6:58 am

DIN

தனது இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதே காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க் ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தலைவரும், உலகின் மிகப் பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வருகையை ஒத்திவைத்திருப்பதற்கான காரணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக எனது இந்திய பயணம் ஒத்திவைக்கப்படுகிறது, ஆனால், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் பயணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமா் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருந்தார்.

இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டெஸ்லாவின் முதல் காலாண்டு செயல்திறன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்காவில் ஏப்ரல் 23 அன்று மஸ்க், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிசெய்யும் வகையில், அவரது எக்ஸ் பதிவு அமைந்துள்ளது.

இந்தியாவில் மின்சார காா்களைத் தயாரிக்க அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறாா். இந்நிலையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் குழுவுடன் இந்தியா வருவதற்கு பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது.

முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்ததாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.