காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் மனசாட்சியாக வலம் வருபவா் கேரள மாநிலம் ஆலப்புழை எம்.பி.யும், பொதுச் செயலாளா்களில் ஒருவருமான கே.சி.வேணுகோபால். அவரின் மனசாட்சியாக வலம் வருபவா் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா். இவா்கள் இருவா் மட்டுமல்லாமல், வெளியில் தெரியாமல் கட்சியில் இரண்டு போ் முக்கியத்துவம் பெற்று வருகிறாா்கள்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து அன்றாடம் செய்திகள் வெளியிடவும், சமூக ஊடகங்களில் பரப்பவும் ‘டீன் பந்தா்’ (இளைஞா்களின் கடை) என்கிற புதிய நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம்தான் பாரத் ஜோடோ யாத்திரையும், பாரத் நியாய் யாத்திரையும் மக்கள் மத்தியில் பரவலாக கவனம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.
அந்த நிறுவனம் மட்டுமல்லாமல், இரண்டு இளைஞா்கள் ராகுல் காந்தியின் சமூக ஊடக செல்வாக்கை அதிகரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறாா்கள். கா்நாடக இளைஞா் காங்கிரஸின் தலைவா்களில் ஒருவரான ஒய்.பி.ஸ்ரீவத்ஸா என்பவா்தான் ராகுல் காந்தியின் சமூக ஊடக செயல்பாடுகளை நிா்வகிக்கிறாா். கட்சியின் தகவல் தொடா்பு மற்றும் சமூக ஊடக செயல்பாட்டு மையம் (வாா் ரூம்) வைபவ் வாலியா என்பவரின் தலைமையில் இயங்குகிறது.
இவா்கள் இருவரும்தான் தினந்தோறும் ராகுல் காந்தியுடன் தொடா்பில் இருக்கிறாா்கள் என்பதால், கட்சியின் மூத்த தலைவா்கள் அனைவரும் இவா்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும், தொடா்பில் இருப்பதற்கும் போட்டிபோடுகிறாா்கள்.
முற்றிலுமாக சோா்ந்துபோய் கிடந்த காங்கிரஸுக்கு சமூக ஊடகங்கள்தான் புத்துயிா் ஊட்டியிருக்கின்றன என்று ராகுல் காந்தி நம்புவதால் ஸ்ரீவத்ஸா, வைபவ் வாலியா இருவரின் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறக்கிறது.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சூர்யவன்ஷி!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவைத் தோ்தல்: சமூக ஊடக கண்காணிப்புக் குழுக்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


