காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

45 வீட்டுமனைகள்,1 கிலோ தங்கம், ரூ.1.62 கோடி கையிருப்புடன் அரசு பொறியாளர் கைது!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒடிஸாவின் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் கைது

News image

கைது

Updated On :6 ஆகஸ்ட் 2024, 4:40 pm IST

சொத்துக் குவிப்பு வழக்கில் ஒடிஸாவின் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

ஒடிஸாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்துள்ளதாக, ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரதீப்புக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் கணக்கில் வராத இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள், புவனேஸ்வரில் இரண்டு குடியிருப்புகள், 45 வீட்டுமனைகள், சுமார் 1 கிலோ அளவுள்ள தங்கம், ரூ.1.62 கோடி வைப்புத்தொகை, இரண்டு கார்கள் மற்றும் பிரதீப்பின் பிற சொத்துக்களும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பிரதீப் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

பிரதீப், 1991ஆம் ஆண்டில் உதவித்தொகை பொறியாளராக ரூ.2000 மாத சம்பளத்துடன் அரசு பணியில் சேர்ந்தார்; பின்னர், 2001ஆம் ஆண்டு வரையில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஓபிசிசி கூடுதல் தலைமை பொறியாளராக 2022ஆம் ஆண்டில் பதவியுயர்வு பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.