நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கடைசி இருக்கை! செங்கோட்டையில் அவமதிக்கப்பட்டாரா ராகுல் காந்தி?

கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் ராகுலுக்கு இருக்கை ஒதுக்கீடு?

News image

செங்கோட்டையில் ராகுல் காந்தி - Pradeep Yadav/ X

Updated On :15 ஆகஸ்ட் 2024, 0:17 pm IST

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி 11-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்களுக்கு நிகரான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் கண்டனம் எழுந்துள்ளது.

மேலும், கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“நாட்டு மக்களின் குரலாகவும், 233 மக்களவை உறுப்பினர்களுடன் உள்ள எதிர்க்கட்சியின் தலைவராகவும் உள்ள ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அவமானமாகும்.

ஒருநாள் இந்த அரசு ஆட்சியை பறிகொடுத்து, ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பகிர்ந்த ரோஷன் ராய் என்பவரின் பதிவில், “காங்கிரஸ் ஆட்சியின் போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது, ஆனால், பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இரு கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு” எனத் தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்தது குறித்து மத்திய அரசு, ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்தோ எவ்வித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.