சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல, பாதுகாப்பு கவசம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார்.
இந்த விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இன்று காலை கலந்து கொண்டார்.
முன்னதாக நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி தெரிவித்ததாவது:
“நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரம் என்பது நமக்கு வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாகும்.
இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசும் திறன், கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் சக்திதான் சுதந்திரம், ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
सà¤à¥ दà¥à¤¶à¤µà¤¾à¤¸à¤¿à¤¯à¥à¤ à¤à¥ सà¥à¤µà¤¤à¤à¤¤à¥à¤°à¤¤à¤¾ दिवस à¤à¥ शà¥à¤à¤à¤¾à¤®à¤¨à¤¾à¤à¤à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) August 15, 2024
हमारॠलिठसà¥à¤µà¤¤à¤à¤¤à¥à¤°à¤¤à¤¾ सिरà¥à¤« à¤à¤ शबà¥à¤¦ नहà¥à¤ - सà¤à¤µà¥à¤§à¤¾à¤¨à¤¿à¤ à¤à¤° लà¥à¤à¤¤à¤¾à¤à¤¤à¥à¤°à¤¿à¤ मà¥à¤²à¥à¤¯à¥à¤ मà¥à¤ पिरà¥à¤¯à¤¾ हà¥à¤ हमारा सबसॠबड़ा सà¥à¤°à¤à¥à¤·à¤¾ à¤à¤µà¤ हà¥à¥¤
यह शà¤à¥à¤¤à¤¿ हॠà¤à¤à¤¿à¤µà¥à¤¯à¤à¥à¤¤à¤¿ à¤à¥, à¤à¥à¤·à¤®à¤¤à¤¾ हॠसठबà¥à¤²à¤¨à¥ à¤à¥ à¤à¤° à¤à¤®à¥à¤®à¥à¤¦ हॠसपनà¥à¤ à¤à¥ पà¥à¤°à¤¾ à¤à¤°à¤¨à¥ à¤à¥à¥¤
à¤à¤¯ हिà¤à¤¦à¥¤ ð®ð³ pic.twitter.com/foLmlSyJDk
செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்ற பின், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்விலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.
முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று மாலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ராகுல் காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13 நாள்களாகியும் பதிலளிக்காத மோடி, அமித் ஷா: ராகுல் காந்தி

‘நீங்கள் பேட்மேனா?’.. ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு ராகுல் ‘கலகல’ பதில்!
"தமிழ்நாடு' வெறும் வார்த்தையல்ல; தமிழர்களின் வரலாறு: வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

போராடும் மாணவா்கள் பயங்கரவாதிகள் அல்ல: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK




