போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஹரியாணாவில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? அமைச்சர் அதிஷி பதில்

ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? என்கிற கேள்விக்கு தில்லி அமைச்சர் அதிஷி பதிலளித்துள்ளார்.

News image

தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி(கோப்புப்படம்) - பிடிஐ

Updated On :16 ஆகஸ்ட் 2024, 9:05 pm IST

ஹரியாணா பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியா? என்கிற கேள்விக்கு தில்லி அமைச்சர் அதிஷி பதிலளித்துள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், எங்கள் கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் ஆகியோர் ஹரியாணாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியுள்ளனர். அவர்கள் பெரும் கூட்டத்தைக் கண்டுள்ளனர்.

கேஜரிவால், ஹரியாணாவின் மகன். இதனால், மக்கள் அவருடன் தொடர்பு வைத்துள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் முழு பலத்துடன் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று உறுதிபட கூறினார்.

தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, "தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முடிவு எடுக்கப்படும். அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் வீடு வீடாக பிரசாரம் செய்து வருகிறோம். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.