
மகாராஷ்டிரத்தில் மத நிகழ்ச்சியில், இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறிய ராம்கிரி மஹாராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷா பஞ்சலே கிராமத்தில், இந்து மதத் தலைவர் ராம்கிரி மஹாராஜ் தலைமையில் ஆன்மீகக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முகமது நபி, இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துகளை, ராம்கிரி கூறியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இஸ்லாம் மதத்தின் மீதான ராம்கிரியின் கருத்துகளால், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல், சமாதான உணர்வை வேண்டுமென்றே அவமதிப்பது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ராம்கிரி மஹாராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ராம்கிரி மஹாராஜ், "இந்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எது வந்தாலும் நான் எதிர்கொள்வேன்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.