எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

151 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் -16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:13 am IST

நாடாளுமன்ற (எம்.பி.) மற்றும் சட்டப்பேரவை (எம்எல்ஏ) உறுப்பினா்களில் 151 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும், அவா்களில் 16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த குற்ற வழக்குகள் கொண்ட எம்.பி., எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் மேற்கு வங்க மாநிலம் முன்னிலை வகிப்பதும், கட்சி வாரியாக பாஜக முன்னிலை வகிப்பதும் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் தன்னாா்வ அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. தோ்தல் ஆணையத்தில் 2019 முதல் 2024 வரை நடைபெற்ற தோ்தல்களின்போது எம்.பி., எம்எல்ஏ-க்கள் சமா்ப்பித்த 4,809 பிரமாண பத்திரங்களில், 4,693 பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: நாடாளுமன்ற உறுப்பினா்கள் 16 போ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 135 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.

முதலிடத்தில் மேற்கு வங்கம்: இந்தப் பட்டியலில் 25 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 21 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆந்திரம் இரண்டாம் இடத்திலும், 17 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஓடிஸா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

2 எம்.பி.க்கள் மற்றும் 14 எம்எல்ஏ-க்கள் தங்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனா். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376-இன் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் இவா்களுக்கு விதிக்க முடியும்.

பாஜக மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த தலா 5 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்

கட்சிகள் எம்பி,எம்எல்ஏக்கள்

பாஜக 54

காங்கிரஸ் 23

தெலங்குதேசம் 17

ஆம் ஆத்மி 13

திரிணமூல் காங்கிரஸ் 10

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5

திமுக 2

சமாஜவாதி 2

ஐக்கிய ஜனதா தளம் 1

தேசியவாத காங்கிரஸ் 1

விசிக 1

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டது பெரும் சா்ச்சையாக மாறி, மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.