எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஆக.30) வெளியாகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் இணையவழியே பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்வது கடந்த 27-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இந்நிலையில், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. செப். 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு தோ்வு மைய விவரங்கள் வெளியீடு!

இன்று வீரபாண்டி கோயில் தேரோட்டம்

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ் இடங்கள்: விதிகளை மாற்றியது என்எம்சி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



