பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பொறாமையாலேயே அழிந்து விடும்: சித்தராமையா

சுதந்திர போராட்ட வீரர் ராயண்ணாவின் சிலை திறப்பு விழாவில் முதல்வர் சித்தராமையா பேச்சு

News image

முதல்வர் சித்தராமையா (கோப்புப் படம்)

Updated On :30 ஆகஸ்ட் 2024, 3:45 pm

கர்நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சங்கோலி ராயண்ணாவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது, ``இந்தியா போன்ற சாதி அடிப்படையிலான சமூகத்தில், மகாத்மா காந்தி கூறியது போல், மிகவும் ஓரங்கட்டப்பட்ட நபருக்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் இந்தக் கொள்கையை நம்புகிறேன்,

அதற்கேற்ப எனது திட்டங்களை வடிவமைக்கிறேன். சாதாரணமான வெறுக்கத்தக்க அரசியல் மூலமாக நான் ஆட்சிக்கு வரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆசீர்வாதத்தால்தான் நான் முதல்வரானேன்.

மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கும் வரை, யாரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது. இது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்றவர்களுக்கு பொறாமையை உருவாக்குகிறது. இந்த பொறாமை அவர்களை அழித்துவிடும்; ஆனால், அவர்களால் என்னை அசைக்க முடியாது. எனக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்திற்கும் நான் பயப்படவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்த போர்வீரர் ராயண்ணா தனது சொந்த மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டார். இத்தகைய துரோகிகள் இன்றும் நம்மிடையே உள்ளனர்.

இது போன்ற துரோகிகள் எல்லா காலகட்டங்களிலும் இருந்திருக்கிறார்கள். நாம் ஒன்றுபட்டு அவர்களை எதிர்கொள்ள வேண்டும், தோற்கடிக்க வேண்டும். ராயண்ணாவின் தேசபக்தியையும் போராட்ட உணர்வையும் நாம் உள்வாங்கும்போதுதான், அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற முடியும்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக எந்தவொரு சதித்திட்டத்தையும் நீங்கள் அனுமதிப்பீர்களா? நாங்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவற்றை எதிர்த்துப் போராடுவோம்.

இப்போது, எனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஒரு வருடத்தில், நான் ஐந்து உத்தரவாதங்களையும் செயல்படுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

எம்எல்ஏ சிவண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கனக குருபிதாவைச் சேர்ந்த சித்தராமேஷ்வர் சுவாமிஜி, சிந்தனி மற்றும் நரசிபுர அம்பிகார சவுதய்யா பீடத்தைச் சேர்ந்த சாந்தபிஷ்ம சவுதய்யா மகாஸ்வாமி, தேவரகுடாவைச் சேர்ந்த கரப்பஜ் ஹக்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவரகுட மேம்பாட்டு ஆணையத்திற்கு எதிரான தடை உத்தரவை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், தேவரகுடாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.