பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பொறாமையாலேயே அழிந்து விடும்: சித்தராமையா

சுதந்திர போராட்ட வீரர் ராயண்ணாவின் சிலை திறப்பு விழாவில் முதல்வர் சித்தராமையா பேச்சு

News image

முதல்வர் சித்தராமையா (கோப்புப் படம்)

Updated On :30 ஆகஸ்ட் 2024, 9:15 pm IST

கர்நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சங்கோலி ராயண்ணாவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது, ``இந்தியா போன்ற சாதி அடிப்படையிலான சமூகத்தில், மகாத்மா காந்தி கூறியது போல், மிகவும் ஓரங்கட்டப்பட்ட நபருக்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் இந்தக் கொள்கையை நம்புகிறேன்,

அதற்கேற்ப எனது திட்டங்களை வடிவமைக்கிறேன். சாதாரணமான வெறுக்கத்தக்க அரசியல் மூலமாக நான் ஆட்சிக்கு வரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆசீர்வாதத்தால்தான் நான் முதல்வரானேன்.

மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கும் வரை, யாரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது. இது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்றவர்களுக்கு பொறாமையை உருவாக்குகிறது. இந்த பொறாமை அவர்களை அழித்துவிடும்; ஆனால், அவர்களால் என்னை அசைக்க முடியாது. எனக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்திற்கும் நான் பயப்படவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருந்த போர்வீரர் ராயண்ணா தனது சொந்த மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டார். இத்தகைய துரோகிகள் இன்றும் நம்மிடையே உள்ளனர்.

இது போன்ற துரோகிகள் எல்லா காலகட்டங்களிலும் இருந்திருக்கிறார்கள். நாம் ஒன்றுபட்டு அவர்களை எதிர்கொள்ள வேண்டும், தோற்கடிக்க வேண்டும். ராயண்ணாவின் தேசபக்தியையும் போராட்ட உணர்வையும் நாம் உள்வாங்கும்போதுதான், அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற முடியும்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக எந்தவொரு சதித்திட்டத்தையும் நீங்கள் அனுமதிப்பீர்களா? நாங்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவற்றை எதிர்த்துப் போராடுவோம்.

இப்போது, எனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஒரு வருடத்தில், நான் ஐந்து உத்தரவாதங்களையும் செயல்படுத்தியுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

எம்எல்ஏ சிவண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கனக குருபிதாவைச் சேர்ந்த சித்தராமேஷ்வர் சுவாமிஜி, சிந்தனி மற்றும் நரசிபுர அம்பிகார சவுதய்யா பீடத்தைச் சேர்ந்த சாந்தபிஷ்ம சவுதய்யா மகாஸ்வாமி, தேவரகுடாவைச் சேர்ந்த கரப்பஜ் ஹக்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேவரகுட மேம்பாட்டு ஆணையத்திற்கு எதிரான தடை உத்தரவை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், தேவரகுடாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.