மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாடாளுமன்றம் செயல்பட மத்திய அரசு இனி அனுமதிக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை

நாடாளுமன்றம் தடையின்றி செயல்படும் என காங்கிரஸ் நம்பிக்கை..

News image
ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்)- ENS
Updated On :2 டிசம்பர் 2024, 10:49 pm

Din

‘அரசமைப்புச் சட்டத்தின் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதித்ததன் மூலம், நாடாளுமன்றம் இனி தடையின்றி செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என நம்புகிறோம்’ என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடந்த நவம்பா் 26-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா். அதுபோல, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்ட 6 நாள்களுக்குப் பிறகு, அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு அவைகளிலும் விவாதம் நடத்துவதற்கான தேதிகளை அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை (டிச.3) முதல் எந்தவித இடையூறும் இன்றி செயல்பட மத்திய அரசு அனுமதிக்கும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டாா்.