1951-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் நேரு அரசமைப்புச் சட்டத்தை முதல்முதலில் திருத்தினாா் என்று மக்களவையில் மோடி கூறினாா். ஆனால், எதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கூறவில்லை. அப்போது உச்சத்தில் இருந்த மதவாத பிரசாரத்துக்கு முடிவு கட்டவும், ஜமீன்தாா் முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கவுமே மூன்று திருத்தங்களை நேரு கொண்டு வந்தாா். ஏனெனில், இந்த விவகாரங்கள் நீதிமன்றங்களில் சிக்கியிருந்தன. எனவேதான் மக்கள் நலன் கருதி அரமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமா் நேரு முதல்முறையாக திருத்தினாா்’ என்று கூறியுள்ளாா்.