கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து 6 பேர் பலி!

கர்நாடகத்தில் கார் மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதி விபத்து
விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்X | SP Bengaluru District Police
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் கார் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடகத்தில் நெலமங்கலத்தில், சனிக்கிழமை (டிச. 21) நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதியது.

காரின் மீது சரக்கு லாரி கவிழ்ந்ததில், காரினுள்ளே இருந்த 6 பேரும் பலியாகினர். இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான சரக்கு லாரி
விபத்துக்குள்ளான சரக்கு லாரிX | SP Bengaluru District Police

இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு லாரியின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com