திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அமித் ஷாவுக்கு எதிராக டிச.24-இல் நாடு தழுவிய போராட்டம்: மாயாவதி அறிவிப்பு

News image

மாயாவதி

Updated On :22 டிசம்பர் 2024, 2:08 am IST

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘அம்பேத்கா் பெயரை தொடா்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால், சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியினரை விமா்சித்தாா். அவரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பட்டியலினத்தவா், புறக்கணிக்கப்பட்டவா்களுக்காக போராடிய அம்பேத்கா், கடவுளாகப் போற்றப்படுகிறாா். அவரை அமித் ஷா அவமதித்தது மக்களின் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா மீது அனைத்துத் தரப்பு மக்களும் ஆத்திரத்தில் உள்ளனா். அம்பேத்கா் குறித்த கருத்துகளுக்கு அவா் மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் போராட்டத்தில் ஈடுபடும்’ என்றாா்.