தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

எரிந்த நிலையில் 4 வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2024, 5:35 pm

DIN

ராம்பூர்: எரிந்த நிலையில் நான்கு வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கங்காபூர் கதிம் கிராமத்தில், சனிக்கிழமை காலை சுமார் 9 மணி அளவில், சிறுவன் காணாமல் போனதாக சிறுவனின் குடும்பத்தினர் பகல் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், இரவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.