நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி

தில்லியில் திங்கள்கிழமை(டிச.23) நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: தில்லியில் திங்கள்கிழமை(டிச.23) நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் திங்கள்கிழமை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

பிஷப்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடுவார்.

நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944 இல் நிறுவப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களுடனும் நெருக்கமாக பணியாற்றும் அமைப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com