பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று பஞ்சாப் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : குடியரசு நாள் அணிவகுப்புக்கு சுழற்சி முறையில்தான் அலங்கார ஊர்தி!
உத்தரப் பிரதேச மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இணைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காவலர்களை தாக்க முயன்ற மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகளை போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர், அவர்களை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 ஏகே ரைபிள் மற்றும் 2 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விரேந்தர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் குருவீந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளை திறப்பு

உடற்பயிற்சியாளர் சுட்டுக் கொலை! தொடரும் என பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை
17 வயது சிறுவன் கொலை: கொலையாளியை சுட்டுக் கொன்ற உத்தரப் பிரதேச காவல்துறை!
உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



