நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது பற்றி...

News image

காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை - PTI

Updated On :23 டிசம்பர் 2024, 11:21 am IST

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று பஞ்சாப் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இணைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, காவலர்களை தாக்க முயன்ற மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகளை போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர், அவர்களை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 ஏகே ரைபிள் மற்றும் 2 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விரேந்தர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் குருவீந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.