லடாக்கில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 காா்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த வியாழக்கிழமை (டிச. 26) இந்த சிலையை திறந்து வைத்தாா்.
லடாக்கில் சிவாஜி சிலை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே உள்ளூர் மக்களிடையே இது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. லடாக்கின் பாரம்பரியம், சூழலியல் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாராட்டிய யூனிட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அளித்த நிதியின் மூலம், அந்த யூனிட் அமைந்துள்ள பகுதியிலேயே சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சிலை நிறுவ இந்த இடம் சரியானதா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர்.
லடாக் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்ஸின் சிவாஜி சிலை தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,,
பாங்காங்கில் நிறுவப்பட்டுள்ள சிலை குறித்து உள்ளூர்வாசியாக குரல் எழுப்புகிறேன். உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிவாஜி நிலை எழுப்பப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டதில் லடாக்கின் தனித்துவமான கலாசாரத்துக்கும் சூழலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இயற்கையை பிரதிபலிக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
SHRI CHHATRAPATI SHIVAJI MAHARAJ STATUE AT PANGONG TSO, LADAKH
— @firefurycorps_IA (@firefurycorps) December 28, 2024
On 26 Dec 2024, a majestic statue of Shri Chhatrapati Shivaji Maharaj was inaugurated on the banks of Pangong Tso at an altitude of 14,300 feet.
The towering symbol of valour, vision and unwavering justice was⦠pic.twitter.com/PWTVE7ndGX
லடாக்கிற்கு அருகிலுள்ள கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர் சஜ்ஜாத் கார்கிலி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
லடாக்கில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை, லடாக்குடன் வரலாற்று ரீதியாகவோ கலாசார ரீதியாகவோ தொடர்பற்றதாக உள்ளது. சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை நாங்கள் மதிக்கிறோம். எனினும் பொருத்தமற்ற இடத்தில் கலாசார சின்னங்கள் புகுத்தப்பட்டுள்ளது.
க்ரீ சுல்தான் சோ அல்லது அலி ஷேர் கான் அஞ்சன் மற்றும் சீங்கே நம்க்யால் போன்ற உள்ளூர் வரலாற்று நபர்களை கௌரவிக்கும் வகையில் சிலைகளை நிறுவுவதை நாங்கள் பாராட்டுவோம். இருப்பினும், கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவை கூட பாங்காங் போன்ற சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்கப் பகுதிகளில் வைக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாங்காங் பகுதியில் சிலை வைக்க பனிமலைகள் மீதான போரில் சிறப்பாக செயல்பட்ட ஜெனரல் ஜோராவர் சிங் (1784 - 1841) பொருத்தமான நபர் என கர்னல் சஞ்சய் பாண்டே முன்மொழிந்திருந்தார். 180 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் இருந்து சண்டையிட்ட நபர். திபெத்தில் நடந்த போரின்போது அவர் உயிரிழந்ததால், லே கோட்டையானது. ஜோராவர் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. அவரின் சிலை இங்கு பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம் திரும்பினார் அபிஜீத் தீப்கே! சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

செய்யூர் சிவன் கோயிலில் புத்தா் சிலை கண்டெடுப்பு!

மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ!

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: இந்தியா குற்றச்சாட்டு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



