ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவரான ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு இணையத்தில் வந்த கொலை மிரட்டல்களை ராகுல்காந்தி கண்டித்துள்ளார். இது ஒரு இழிவான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, 'பெண்களை மிரட்டுவதும், அவமதிப்பதும் கோழைத்தனமான செயல். வலிமையற்றவர்களின் பிரதான ஆயுதமும் அதுதான்' எனக் கூறியுள்ளார்.
மேலும், 'காங்கிரஸ் கட்சியும், நானும் ஒய்.எஸ். சர்மிளாவிற்கும், சுனிதாவிற்கும் ஆதரவாக நிற்கிறோம். இந்த இழிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், 'காங்கிரஸ் கட்சிக்கும் ஷர்மிளாவிற்கும் நாளுக்கு நாள் ஆந்திராவில் ஆதரவு பெருகிவருவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது' என ஏஐசிசி பொதுச்செயலாளர் கே சி வேனுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காகவும், அது குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஒய்.எஸ் சர்மிளா தில்லி ஆந்திரபவனில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!

வீதி நாடகங்கள் மூலம் சமூகத்தைக் கற்பிக்கும் கோவை ஆசிரியை!

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது!

பாராமதி இடைத்தேர்தலில சுநேத்ரா பவாருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாது என்சிபி: சுப்ரியா சுலே
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

