லக்னோ: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய தூதரக பணியாளரை பிப்.7 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவலர்கள், ஞாயிற்றுக்கிழமை சதேந்திர சிவாலை கைது செய்தனர்.
சிவால், 2021 முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நாட்டுக்கு எதிராக செயல்பட்டதற்கு பணம் பெற்றதாக பிரிவு 121ஏ கீழ் முதல் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது.
கூடுதல் அமர்வு நீதிபதி வி.எஸ்.திருப்பதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது திருப்தியளிக்கும் வகையில் அவர் பதில்களை அளிக்கவில்லை எனவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் ஏடிஎஸ் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்பு, வெளியுறவு துறை மற்றும் ராணுவ தகவல்கள் குறித்து சிவால் ஐஎஸ்ஐக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.