நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!

நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நொய்டா விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

நொய்டா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தில்லி நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் மற்றும் பேருந்துகளில் வருகை தந்துள்ளனர்.

நொய்டா அதிவிரைவுச் சாலையில் இருந்து தில்லி செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து விவசாயிகளின் டிராக்டர்களை நொய்டா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கிச் செல்வதை தடுப்பதற்காக தில்லி எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com