மோடி பிறப்பால் ஓபிசி இல்லை, அவர் ஒரு 'பேப்பர் ஓபிசி' என ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட தகவல் எனது கருத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது என ராகுல் கூறியுள்ளார்.
மோடியின் ஓபிசி அடையாளம் அக்டோபர் 27, 1999-லேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என மத்திய அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மோடி பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் ஓபிசி கிடையாது என்பது தெளிவாகிறது என ராகுல் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளார்.
'ஒரு நாளுக்கு மூன்று முறை உடை மாற்றிக்கொள்ளும், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைகளை போட்டுக்கொள்ளும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேனாவில் எழுதும் மோடி சொல்லும் ஓபிசி-யின் அர்த்தம் ஒன்லி பிசினஸ் கிளாஸ் (Only Business Class) என்பதே என ராகுல் எக்ஸ் தளப்பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தேர்தல் மை தயாரிக்கும் பணியை தொடங்கியது மைசூரு ஆலை
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஒருபோதும் நீதியைப் பெற்றுத்தர மாட்டார்கள் என அவர் கூறினார். மேலும் 'சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கண்டிப்பாக நாங்கள் நடத்துவோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.