இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போராடுவது விவசாயிகளின் அடிப்படை உரிமை!: பியூசிஎல்

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
விவசாயிகளைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பலமான தடுப்புகள்
Updated On :15 பிப்ரவரி 2024, 2:59 pm

DIN

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான அரசின் நடவடிக்கைகளை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டித்துள்ளது. மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த அவர்களுக்கு முழு உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 - 2021ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தினைச் சுட்டிக்காட்டியது. கடும் வானிலைகளை பொருட்படுத்தாமல் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் என ஆயிரக்கணக்கானோர் அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றனர். 700 விவசாயிகள் உயிரிழந்தைததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

மேலும், 2021 போராட்டத்தை முடிக்கக் காரணமாக அமைந்த மோடியின் உறுதிமொழிகளை அரசு நிறைவேற்ற மறுத்துவிட்டது எனவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது அடிப்படை உரிமை என மக்கள் சிவில் உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள், தங்களது உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், 2021 போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.