புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேடிஎம் வங்கி சேவைகள் மார்.15 வரை தொடரலாம்: தளர்வு அளித்த ஆர்பிஐ!

முன்னதாக பிப். 29 வரை இருந்த காலக்கெடு தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.

News image

பேடிஎம் வங்கி சேவைகள் மார்.15 வரை தொடரலாம்

ANI

Updated On :16 பிப்ரவரி 2024, 2:12 pm

DIN

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சேவைகளை பிப்.29-ம் தேதியுடன் நிறுத்த மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் காலக்கெடு மார்ச் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில், கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகள் மார்ச் 15, 2024 வரை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர்கள் அடிக்கடி கேட்கும் பேடிஎம் தொடர்பான கேள்விகளுக்கு ஆர்பிஐ பதிலளித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்குகளில் பணம் உள்ள வரை அவற்றை எடுக்கவும் பரிமாற்றம் செய்யவும் முடியும். இதற்கு பேடிஎம் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 15-க்குப் பிறகு வாடிக்கையாளர்கள் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியாது. கடன் பரிவர்த்தனையோ வைப்பு நிதியோ அந்த கணக்குகளில் மேற்கொள்ள இயலாது. வட்டி, கேஷ்பேக், ரீபண்ட் ஆகியவை பெற்றுக் கொள்ளலாம்.

பேடிஎம்மின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “பேடிஎம்மின் கியூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்ட் மெஷின் ஆகியவை மார்ச் 15-க்குப் பிறகும் எப்போதும் போல இருக்கும். ஆர்பிஐயின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் வெளியாகியுள்ளன. வதந்திகளை நம்பாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.