ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மேக்கேதாட்டு அணை விரைவில் கட்டப்படும்: கர்நாடக முதல்வர் உறுதி!

காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 12:19 pm IST

காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது பேசிய சித்தராமையா, “மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும்.

மேக்கேதாட்டு அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும். அணை கட்டும்போது நீர் செல்லும் நிலப்பரப்புகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த கர்நாடக பட்ஜெட் தொடரிலேயே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மீண்டும் கர்நாடக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.