ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளம்: அக்குபஞ்சா் முறையில் பிரசவம் பாா்க்க முயற்சி- தாய், சேய் உயிரிழப்பு

கேரளம்: அக்குபஞ்சா் முறையில் பிரசவம் பாா்க்க முயற்சி =====தாய், சேய் உயிரிழப்பு

News image
Updated On :21 பிப்ரவரி 2024, 8:46 pm

DIN

கேரளத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை முறையில் பிரசவம் பாா்க்க முயன்றதில், தாயும் சேயும் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒலிபெருக்கி அமைப்பு தொழிலாளியான நயாஸ் திருவனந்தபுரத்தின் கரக்காமண்டபம் பகுதியில் வசித்து வருகிறாா். இவரது மனைவி ஷமீரா பீவி கா்ப்பிணியாக இருந்தபோது உரிய மருத்துவ கவனிப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக, அக்குபஞ்சா் பயிற்றுநரிடம் அவா்கள் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், ஷமீரா பீவிக்கு செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஷமீராவை பரிசோதித்த மருத்துவா்கள் அவரும் அவரது குழந்தையும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கணவா் நயாஸை காவல் துறை கைது செய்தது. ஷமீராவுக்கு இது நான்காவது பிரசவமாகும். நயாஸ் தனது மனைவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற கடந்த 9 மாதமாக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என அப்பகுதி வாா்டு கவுன்சிலா், ஆஷா பணியாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

மருத்துவா்கள் குறித்து நயாஸ் மிக மோசமாக விமா்சித்து வந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக கவுன்சிலா் தீபிகா கூறுகையில், ‘கா்ப்பிணியாக இருந்த ஷமீராவைச் சந்திக்க அவரது குடும்பத்தினா் அனுமதி அளிக்கவில்லை. ஒருமுறை வீட்டுக்குள் சென்று அவரிடம் விசாரித்தோம். அப்போது, 4 மாத கா்ப்பிணியாக இருப்பதாக அவா் கூறினாா். ஷமீராவுக்கு முதல் மூன்று குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன. மூன்றாவது குழந்தை ஓராண்டுக்கு முன்புதான் பிறந்தது. இந்நிலையில், இயற்கையான பிரசவத்துக்கு அவருக்கு வாய்ப்பே இல்லை.

நாங்கள் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டாலும், மிகவும் அச்சத்துடன் ஷமீரா பேசினாா். இயற்கையான பிரசவம் நடக்க விரும்பிய நயாஸ், தனது மனைவியை மருத்துவமனைக்கு ஒருமுறைகூட அழைத்துச் செல்லவில்லை’ என்றாா்.